Pages

Friday, 6 September 2013

பாரதியின் பாடை

பாரதியின் பாடைக்கு பின்னால் போனவர்களின் எண்ணிக்கை பதினொன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

வாசிப்பு பழக்கமற்ற ஒரு சமூகத்தை தொடர்ந்து வைத்திருக்கும் வித்தைகளைப்பற்றிய தகவல்களை இமயம் அறிந்துகொள்ளாதது இமயத்தின் பிரச்சனையல்ல.


வாசிப்பு பழக்கமுள்ள சமூகத்தில் எழுப்பப்பட வேண்டிய கேள்வியை இமயம் போன்றவர்களிடம் கேட்பது என்ன வகை நேர்காணல்?


(((கேள்வி ஆனந்தவிகடன்  -- ''எழுத்தாளர்களைத் தமிழ் சமூகம் கொண்டாடுவது இல்லை, அவர்களை வசதியாக வாழவைக்கத் தவறிவிட்டது என்று சில எழுத்தாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்களே!''

பதில் இமயம் -- 'எனக்குப் பிடித்திருக்கிறது நான் எழுதுகிறேன். இந்தச் சமூகம் ஏன் என்னை வசதியாக வாழ வைக்க வேண்டும்? மக்கள் இவர்களை வசதியாக வாழவைக்கும் அளவுக்கு அப்படி என்ன எழுத்தில் சாதித்துவிட்டார்கள்?  வள்ளுவன் தொடங்கி பாரதிதாசன் வரை இன்றும் அவர்களுடைய படைப்புகள் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கின்றன.. 'சமகாலத்தில் நம் சமூகம் எப்படி இருந்தது?’ என்பதற்கான ஆவணம்தான் இலக்கியப் படைப்பு. அந்த வகையில் யாருக்கும் இல்லாத பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அதுவே, அவனுக்குக் கிடைத்த ஆகப் பெரிய அங்கீகாரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலப் புலவர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் தமிழ்ச் சமூகம்  இன்றும் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறது. இன்று அப்படியான கொண் டாடத் தகுதியுள்ள படைப்புகளைப் படைத்த வர்கள் இங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள்? தான் வாழும்போதே தன் படைப்புகள் சாவதைப் பார்க்க நேரிடுகிற எழுத்தாளர்களையும் எழுதிய ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே செத்துப்போகிற படைப்புகளை உருவாக்குகிறவர்களையும் எந்தச் சமூகம் கொண்டாடும்? எப்படி வசதியாக வாழ வைக்கும்?'')))

No comments:

Post a Comment