நுண்அதிகாரம் செயல்படும் எல்லா வடிவங்களையும் பின்நவீனத்துவம் கேள்விக்குள்ளாக்குகிறது. இலக்கியத்தை உருவாக்கியவர்களும் உழைத்தவர்களும் புனிதப்படுத்தலை அறிந்தோ அறியாமலோ செய்து வந்திருக்கிறார்கள்.
எழுதுவதற்கான சூழல்கூட புனிதமான இடமாக விவரிக்கப்பட்டது. மென்மையானவனாக சித்தரிக்கப்பட்டவனே கவிஞனாக உலாவந்தான்.
பின்நவீனத்துவதின் அறிமுகத்துக்கு பின்னரே மனநோயாளிகளின் எழுத்துக்களும் விளிம்புநிலை எழுத்துக்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அங்கீகரித்தல் என்பதை அதிகார செயல்பாடாக பார்க்கும் மனப்பக்குவங்கள் அதிசயங்களாகின.
தமிழ்நாட்டு சூழலில் வேகமாக சந்தைப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவம் எழுத்ததிகாரத்தைபற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கவில்லை. பேஸ்புக்கில் எழுதும் பெரும்பாலான பதிவர்கள் நகைச்சுவை சார்ந்தே தங்கள் சிந்தனை முறைகளை நகர்த்தி வந்திருக்கிறார்கள்.
நகைச்சுவை சாராத சிந்தனைமுறைகொண்டவர்கள் கழிப்பறை கிறுக்கல்களைப்பற்றிய அறிவைப்பெற்றிருப்பது வரவேற்க்கதக்கது.
அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் எழுத்துக்கள் பெரும்பாலும் சமூகதளங்களிலேயே சாத்தியமாகியிருக்கின்றனவென்பதை நகைச்சுவை சாராத சிந்தனைமுறைகொண்டவர்களுக்கு யார் தெரியப்படுத்துவது. சாக்ரடீஸ் போன்றவர்கள் செய்து வருவது இணைய சூழலை அரசியல்தளங்களாக மாற்றும் காரியத்தைதான்.
கழிப்பறையில் எழுதுவது மாத்திரம் இலக்கியம் என்று பின்நவீனத்துவம் மணியடிக்குமானால் அதுவொருவகை வறட்டு சிந்தனையாகிவிடும் ஆபத்திருக்கிறது.
No comments:
Post a Comment